செய்திகள்

திருவள்ளூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2018-06-11 08:24 GMT   |   Update On 2018-06-11 08:24 GMT
திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு டீச்சர்ஸ் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் மூர்த்தி. ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வடமதுரையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.

இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8 சவரன் நகை, ரூ.13 ஆயிரம் கொள்ளைபோனது தெரிந்தது. #Tamilnews

Tags:    

Similar News