செய்திகள்

குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-06-10 17:34 GMT   |   Update On 2018-06-10 17:34 GMT
ஊத்தங்கரை அருகே, குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே, குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அண்ணா நகர் மேட்டுக்காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலித்தொழிலாளி. இவருக்கும், ஊத்தங்கரை அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்திரலேகா (வயது21) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சந்திரலேகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்திரலேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் விமல்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News