செய்திகள்

போத்தனூரில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் பலி

Published On 2018-05-31 17:11 GMT   |   Update On 2018-05-31 17:11 GMT
போத்தனூரில் சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்த பெண் மீது ஸ்டவ் வெடித்து சிதறியது. இதில் காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

கோவை:

போத்தனூர் பாரதிநகரை சேர்ந்தவர் நாகராஜ். கார் டிரைவர். இவரது மனைவி அமலா (வயது 21). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பவத்தன்று அமலா வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர் பாராதவிதமாக ஸ்டவ் வெடித்து சிதறியது.

இதில் அமலாவின் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து கதறினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக் காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்

இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

Tags:    

Similar News