செய்திகள்

பரீட்சையில் தோல்வி- பிளஸ்-1 மாணவி தீக்குளிப்பு

Published On 2018-05-30 08:12 GMT   |   Update On 2018-05-30 08:12 GMT
சேலத்தில் பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு உள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சேலம்:

சேலம் சூரமங்கலம், ஆண்டிப்பட்டி மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ரவீனா (வயது 17). இவர் மேச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ரவீனா தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இன்று காலை வீட்டில் இருந்தபோது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

இதனால் தீ உடல் முழுவதும் பற்றி எரிந்தது. வலி தாங்காமல் அவர் அலறினார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து ரவீனாவை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு உள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
Tags:    

Similar News