செய்திகள்
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யபட்டு வந்த 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. #ThermalPowerStation
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் முதல் நிலையில் மூன்று அலகுகளில் தலா 630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதே போல இரண்டாம் நிலை இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் நிலை மூன்றாவது அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது.
இதையடுத்து அதில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 210 வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு நிலைகளில் மொத்தம் 1620 மெகா வாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது.
கொதிகலன் குழாயை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். #ThermalPowerStation