செய்திகள்
ராஜபாளையம் அருகே பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி
ராஜபாளையம் அருகே பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கனாதன் புத்தூர் நாடார் நடுத் தெருவை சேர்ந்தவர் தெய்வ லோக கனி (வயது 43). விவசாயியான இவருக்கு இனாம்கோவில்பட்டி ரோட்டில் சொந்தமான பனைமர தோப்பு உள்ளது.
நேற்ற தெய்வலோக கனி தனது குடும்பத்தினருடன் தோப்புக்கு சென்றார். அங்கு அவர் பனை மரத்தில் ஏறி நுங்கு பறித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது. உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தெய்வலோக கனி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மகள் கஸ்தூரி கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். #tamilnews