செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1299 கன அடியாக அதிகரிப்பு

Published On 2018-05-24 10:11 GMT   |   Update On 2018-05-24 10:11 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,299 கன அடியாக அதிகரித்தது.
சேலம்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் 2 வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 9-ந் தேதி 1970 கன அடி தண்ணீர் வந்தது. பின்னர் மழை குறைந்ததால் படிப்படியாக நீர்வரத்து குறைந்து நேற்று 603 கன அடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,299 கன அடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது.

நேற்று 32.8 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று சற்று உயர்ந்து 32.94 அடியானது. விரைவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News