செய்திகள்

கருப்பூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2018-05-23 10:54 GMT   |   Update On 2018-05-23 10:54 GMT
கருப்பூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(24ந்தேதி) நடைபெற உள்ளது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப் பட்டி, காமலாபுரம், எட்டி குட்டப்பட்டி, கருத்தானூர், சக்கர செட்டிப்பட்டி, புளியம் பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதிபட்டி, ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் மவுலீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News