செய்திகள்

கும்பகோணத்தில் வேன்களில் சாராயம் - மது பாட்டில்களை கடத்தல்: 2 பேர் கைது

Published On 2018-05-19 18:10 GMT   |   Update On 2018-05-19 18:10 GMT
கும்பகோணத்தில் சாராயம், மது பாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம்:

கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த 1 வேன், 1 மினிலாரியையும் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஒரு வேனில் 500 லிட்டர் கள்ளசாராயம் இருப்பதும், மற்றொரு வேனில் 350 மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இதுதொடர்பாக வேன்களை ஓட்டி வந்த கும்பகோணம் மதகடி தெருவைச் சேர்ந்த சரவணன் (வயது 48), இளையராஜா (36) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் யாருக்காக சாராயம் மற்றும் மது பாட்டில்களை கடத்தி வந்தனர்? இவர்கள் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார்? யார்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணத்தில் சாராயம், மது பாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News