செய்திகள்

தவளக்குப்பம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற டிரைவர் கைது

Published On 2018-05-19 11:33 GMT   |   Update On 2018-05-19 11:33 GMT
தவளக்குப்பம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்:

தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தை அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 21). டிரைவர். இவர் அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமணன் காதலித்து வந்த இளம்பெண் திடீரென மாயமானார். அதே வேளையில் லட்சுமணனும் மாயமாகி இருந்தார்.

இதையடுத்து மாயமான பெண்ணின் பெற்றோர் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். புகாரில் தங்களது மகளை லட்சுமணன் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் போக்சோ சட்டத்தின் கீழ் கடத்தல், கற்பழித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி சென்ற லட்சுமணனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.

மேலும் கடத்தி செல்லப்பட்ட இளம்பெண்ணை மீட்டனர். இன்று அவர்கள் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.

Tags:    

Similar News