செய்திகள்

ஒரே நாளில் 4,257 டன் சரக்கு இறக்குமதி- சென்னை துறைமுகம் சாதனை

Published On 2018-05-17 03:55 GMT   |   Update On 2018-05-17 03:55 GMT
சென்னை துறைமுகம் கடந்த 13-ந்தேதி ‘எம்.வி. லேடி செலின்’ என்கிற கப்பலில் இருந்து 4 ஆயிரத்து 257 டன் சரக்குகளை ஒரே நாளில் இறக்குமதி செய்து சாதனை படைத்து உள்ளது.#chennaiharbor
சென்னை:

சென்னை துறைமுக சபை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை துறைமுகம் கடந்த 13-ந்தேதி ‘எம்.வி. லேடி செலின்’ என்கிற கப்பலில் இருந்து 4 ஆயிரத்து 257 டன் சரக்குகளை ஒரே நாளில் இறக்குமதி செய்து சாதனை படைத்து உள்ளது.

இதற்கு முன்பாக கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி ‘எம்.வி.ஒயின் ஷன்’ என்ற கப்பலில் இருந்து ஒரே நாளில் 3 ஆயிரத்து 531 டன் சரக்கு இறக்குமதி செய்தது சாதனையாக இருந்தது.

தற்போதைய சாதனைக்கு காரணமான, கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த பெல் நிறுவனத்துக்கும், சரக்கு இறக்கும் ஊழியர்களுக்கும் துறைமுக சபை தலைவர் ரவீந்திரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #chennaiharbor
Tags:    

Similar News