செய்திகள்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகா - தமிழக எல்லைப் பகுதியில் கனமழை கொட்டியதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரித்தது.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டிருக்கிறது. நேற்றுமுன்தினம் 1900 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று சற்று சரிந்து 1600 கனஅடியாக இருந்தது.
கர்நாடக-தமிழக எல்லைபகுதியான அஞ்சசெட்டி, உலுக்கானபள்ளி, நட்டாறம்பாளையம், கிகேரெட்டி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்ததால் நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரித்தது.