செய்திகள்
மதுரை அருகே மின்சாரம் தாக்கி ஆடு மேய்த்த பெண் பலி
மதுரை அருகே மின்சாரம் தாக்கியதில் ஆடு மேய்த்த பெண் இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகில் உள்ள கருவனூரை சேர்ந்த மலைச்சாமி மனைவி கச்சம்மாள் (வயது 50). ஆடு மேய்க்கும் பெண்.
இவர் நேற்று மாலை அங்குள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கச்சம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக மலைச்சாமி எம்.சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.