செய்திகள்

கோவையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-05-08 10:27 GMT   |   Update On 2018-05-08 10:27 GMT
ஜாக்டோ-ஜியோ சங்கத்தினரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததை கண்டித்து கோவையில் இன்று 10-ம் வகுப்பு வினாத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கோவை:

ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் இன்று சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் சென்னை சென்றனர். அவர்களில் ஒரு சிலரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து கோவையில் இன்று 10-ம் வகுப்பு வினாத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோவை சரவணம்பட்டி, கணபதி, நவ இந்தியா ஆகிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்திற்கு பின் அவர்கள் விடைத்தாள் திருத்த சென்றனர்.


Tags:    

Similar News