செய்திகள்

கன்னியகோவிலில் மருமகன் வீட்டில் தங்கி இருந்த மாமனார் தற்கொலை

Published On 2018-05-02 12:11 GMT   |   Update On 2018-05-02 12:11 GMT
கன்னியகோவிலில் மருமகன் வீட்டில் தங்கி இருந்த மாமனார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்:

புதுவை பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 62). உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த சில நாட்களாக கன்னியகோவில் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மருமகன் ஜெகநாதன் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு கிருஷ்ணமூர்த்தி மருமகன் வீட்டில் தூங்கினார்.

இன்று காலை பார்த்த போது, வீட்டின் பின்பக்கத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் கிருஷ்ணமூர்த்தி கயிற்றால் தூக்குபோட்டு பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து ஜெகநாதன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து நோய் கொடுமையால் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News