search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமனார் தற்கொலை"

    • தங்கராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் இறந்து கிடந்தார்.
    • போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளை அருகே உள்ள இட்டேரி கேபிரியேல் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மகன் தமிழரசன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (26).

    தங்கராஜ் மனைவி இறந்துவிட்டதால் அவர் 2-வது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வந்தார். இதற்காக தனது மருமகள் முத்துமாரியை வீட்டை காலி செய்யக் கூறி வற்புறுத்தினார். ஆனால் இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். கடந்த ஏப்ரல் 7-ந் தேதி தங்கராஜூக்கும், அவரது மருமகளுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ், முத்துமாரியை தலையில் இரும்பு கம்பியால் அடித்தார். பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துமாரி 9-ம் தேதி உயிரிழந்தார்.

    இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தார். ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்த தங்கராஜ் நேற்று ரெட்டியார்பட்டியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் இரவில் அங்குள்ள தனி அறையில் தூங்கச் சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படாததால் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தங்கராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×