பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மோகனூரில் இலவச மருத்துவ முகாம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. முகாமிற்கு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ராஜசேகர் தலைமை தாங்கினார். முகாமில் நாமக்கல் இந்தியர் மருத்துவ சங்கம் தங்கம் புற்றுநோய் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை ஆகியவை தனது நிபுணர்களை வைத்து பரிசோதனை நடத்தியது.
இம்முகாமில் பல்வேறு துறையைச் சேர்ந்த 7 மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். இம்முகாமில் ஆலைப்பணியாளர் சுமார் 315 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கண் பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, ரத்த பரிசோதனை ஆகியவை இம்முகாமின் அம்சங்கள் ஆகும். டாக்டர் குழந்தைவேலு, சுப்பிரமணி, சுந்தர்ராமன், மாவட்ட நிகழ்ச்சி அமைப்பாளர் கார்த்திகேயன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்கள் சதீஷ், தினேஷ்குமார், வேர்டு தொண்டு இயக்குனர் சிவகாமவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.