செய்திகள்

திருவண்ணாமலையில் கல்லூரி மேலாளர் வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை

Published On 2018-05-02 10:01 GMT   |   Update On 2018-05-02 10:01 GMT
திருவண்ணாமலையில் தனியார் பி.எட். கல்லூரி மேலாளர் வீட்டில் 12 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அண்ணாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் வஜ்ரவேலு (வயது 68). தனியார் பி.எட் கல்லூரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வில்வராணி கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.

இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த தங்க நெக்லஸ், மோதிரம், கம்மல் உள்பட 12 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை அள்ளி சென்று விட்டனர்.

வீடு திரும்பிய வஜ்ரவேலு கொள்ளை நடந்தது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பூட்டிய வீடுகளில் கொள்ளையை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News