செய்திகள்

உத்தமபாளையம் அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய கும்பல்

Published On 2018-04-20 12:04 GMT   |   Update On 2018-04-20 12:04 GMT
உத்தமபாளையம் அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தேனி:

உத்தமபாளையம் அருகே உள்ள சுருளிபட்டி கிழக்கு காலனிதெருவை சேர்ந்தவர் சங்கிலி. இவரது மனைவி கவிதா(வயது37). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஆசை(55) என்பவருக்கும் மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று கவிதாவை ஆசை, மனைவி செல்வி, மகன் கார்த்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆபாசமாக பேசி தகராறு செய்தனர்.

மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து ஆசையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News