செய்திகள்
நாமக்கல்லில் எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க-வினர் போராட்டம்
தி.மு.க தலைவர் கருணாநிதி குடும்பம் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜாவை கண்டித்து நாமக்கல்லில் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
தி.மு.க தலைவர் கருணாநிதி குடும்பம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து தெரிவித்த பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜாவை கண்டித்து நாமக்கல்லில் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி தலைமை வகித்தார். அப்போது அங்கு திரண்ட தி.மு.க-வினர் எச்.ராஜா உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராணா ஆனந்த், நந்தகுமார், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள் மகா லட்சுமி, தி.மு.க நாமக்கல் நகர பொறுப்பாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க மகளிர் அணியை சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர்.