செய்திகள்

வேலாயுதம்பாளையம் அருகே மதுபாட்டிலை பதுக்கி விற்ற 2 பேர் கைது

Published On 2018-04-19 12:24 GMT   |   Update On 2018-04-19 12:24 GMT
வேலாயுதம்பாளையம் அருகே திருட்டுத்தனமாக மது பாட்டிலை பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம்,வேலாயுதம் பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவர் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடையில் திருட்டுத் தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக அப் பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே மணிகண்டனை கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 4 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஆணைக்கல்பட்டியைச் சேர்ந்த சம்பத்குமார் (30)என்பவர் மசக்கவுண்டன் புதூர் பிரிவு அருகே முள்ளுக் காட்டில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனே போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மது பாட்டில்களை விற்பனை செய்த சம்பத்குமாரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 4 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News