search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது விற்றவர்கள் கைது"

    • தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசாா ரோந்து சென்றனர்.
    • அப்போது அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரம் போலீசார் வெங்கலாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற பாண்டி முருகன் (வயது51) என்பவரை கைது செய்து 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் வடபுதுபட்டி பகுதியில் வீட்டின் அருகே மது விற்ற பாண்டி (49) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அல்லிநகரம் எஸ்.என்.ஆர். சந்திப்பு அருகே உள்ள கழிப்பறை பகுதியில் மது விற்ற பிரசாத் (20) என்பவரை கைது செய்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிபட்டி போலீசார் குமராபுரம் மயான பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற கார்த்திக் (27) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கடமலைக்குண்டு போலீசார் உப்போடை பாலம் அருகே ரோந்து சென்றபோது மது விற்ற பாண்டியன் (39) என்பவரை கைது செய்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கண்டமனூர் போலீசார் ஜல்லிக்கட்டு பிரிவு சாலையில் ரோந்து சென்றபோது மது விற்ற வேலுச்சாமி (42) என்பவரை கைது செய்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கோம்பை ேபாலீசார் பண்ணைபுரம்- பல்லவராயன்பட்டி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பெட்டிக்கடையில் மது விற்ற ஈஸ்வரன் (51) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மதுவிற்றவர்களை கைது செய்தனர்.
    • அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி போலீசார் பழைய பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற ஆண்டிபட்டி அருகே சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த ஆசை (வயது 46) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தேனி மது விலக்கு போலீசார் பழனிசெட்டிபட்டி பகுதியில் மது விற்ற கோபி (43), காமராஜபுரம் பகுதியில் மது விற்ற அமராவதி (60), ஆகியோரை கைது செய்து 7 மற்றும் 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    போடி தாலுகா போலீசார் சங்கராபுரம் டாஸ்மாக் கடை பகுதியில் ரோந்து சென்ற போது மது விற்ற பால்சாமி (75) என்பவரை கைது செய்து 18 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். உத்தமபாளையம் மது விலக்கு போலீசார் ரோந்து சென்ற போது உழவர் சந்தை அருகே மது விற்ற ராஜா (56), சின்னமனூர் பகுதியில் மது விற்ற சங்கிலி ராஜன் (40) என்பவரை கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    உத்தமபாளையம் போலீசார் உ.அம்மாபட்டி பகுதியில் ரோந்து சென்ற போது மது விற்ற ஜெயராஜ் (61) என்பவரை கைது செய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சுதந்திர தினத்தில் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டது.
    • மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து மதுக்கடை களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அன்றைய தினம் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டது.

    இருந்தபோதும் சிலர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் தேனி போலீசார் உழவர்ச ந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்ற சுப்பிரமணி (வயது30) என்பவரை கைது செய்து 59 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பழனிசெட்டிபட்டி போலீசார் தெற்கு ஜெகநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்ற சின்னச்சாமி (57) என்பவரை கைது செய்து 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கோம்பை போலீசார் துரைசாமிபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்பனையில் ஈடுபட்ட மணிமாறன் (42) என்பவரை கைது செய்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • தேனி மாவட்டத்தில் போலீசார் ரோந்து சென்றதில் அனுமதியின்றி மதுவிற்றவர்களை கைது செய்தனர்.
    • மேலும் அவர்களிடமிருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே மூலக்கடை டாஸ்மாக் கடை பகுதியில் கடமலைக்குண்டு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மலைச்சாமி(57) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஜெயமங்கலம் போலீசார் நடுப்பட்டியில் ரோந்து சென்றனர். அப்போது பெட்டிக்கடை அருகே மதுவிற்ற செல்வம்(51) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மதுபாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்தனர்.

    தேவதானப்பட்டி போலீசார் காளியம்மன் கோவில் அருகே ரோந்து சென்றபோதுஅங்கு மதுவிற்ற தங்கையா என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×