செய்திகள்

குன்னத்தூர் அருகே அ.தி.மு.க. எம்.பி. கார் மோதி பனியன் கம்பெனி அதிபர் பலி

Published On 2018-04-19 10:57 GMT   |   Update On 2018-04-19 10:57 GMT
குன்னத்தூர் அருகே அ.தி.மு.க. எம்.பி. கார் மோதி பனியன் கம்பெனி அதிபர் பலியானார்.
குன்னத்தூர்:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள தேவம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் அருள் குமார் (22). குன்னத்தூர் அருகே உள்ள கம்மாள குட்டையில் பனியன் கம்பெனி நடத்தி வந்தார்.

இவர் கோபியில் நடைபெற்ற உறவினர் வீட்டு விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் குன்னத்தூருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அங்குள்ள செட்டிக்குட்டை பிரிவு அருகே வந்த போது திருப்பூர் அ.தி.மு.க. எம்.பி. சத்யபாமாவின் உறவினர்களை கோவை விமான நிலையத்திலிருந்து அழைத்து வர எம்.பி.க்கு சொந்தமான கார் வந்தது.

இந்த கார் திடீரென அருள்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருள்குமார் சம்பவ இடத்திலே பலியானார். விபத்து குறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News