செய்திகள்
4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல்
தமிழகத்தில் அதிகம் பேசக்கூடிய 4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும் என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
அருப்புகோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தினகரன் அணியை சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் 4 அமைச்சர்கள் மீதான பாலியல் ஆதாரங்கள் விரைவில் வெளியாகும் என்று திடீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெற்றிவேல் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் அதிகம் பேசக்கூடிய 4 அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் மீதும் பாலியல் புகார் உள்ளது. அது தொடர்பான ஆதாரங்கள் விரைவில் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றிவேலின் இந்த பேட்டி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புகோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தினகரன் அணியை சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் 4 அமைச்சர்கள் மீதான பாலியல் ஆதாரங்கள் விரைவில் வெளியாகும் என்று திடீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெற்றிவேல் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் அதிகம் பேசக்கூடிய 4 அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் மீதும் பாலியல் புகார் உள்ளது. அது தொடர்பான ஆதாரங்கள் விரைவில் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றிவேலின் இந்த பேட்டி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.