செய்திகள்

ஓமலூர் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கல்லூரி மாணவர் கைது

Published On 2018-04-17 12:08 GMT   |   Update On 2018-04-17 12:08 GMT
ஓமலூர் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பாலியல் வழக்கு என்பதால் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News