செய்திகள்

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி

Published On 2018-04-16 11:29 GMT   |   Update On 2018-04-16 11:29 GMT
நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் களங்காணி அருகே உள்ள திப்பகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் மணிவேல் (வயது 19). ஜே.சி.பி. டிரைவர். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் ஊர் அருகில் உள்ள கடைக்கு வேகமாக சென்றார்.

அப்போது அங்கிருந்த வேக தடையில் ஏறி இறங்கியபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதில் மணிவேல் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து நல்லியம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News