செய்திகள்

தேனியில் சாக்கு குடோன்களில் தீ விபத்து

Published On 2018-04-16 11:18 GMT   |   Update On 2018-04-16 11:18 GMT
தேனியில் நள்ளிரவில் சாக்கு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது.

தேனி:

தேனி அருகில் உள்ள பொம்மையகவுண்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது43). இவர் பாலன்நகர் மண்டபம் அருகே சாக்கு குடோன் வைத்துள்ளார்.

இதன் அருகே செல்வராஜ் (45), கந்தசாமி (45) ஆகியோருக்கு சொந்தமான குடோன்களும் உள்ளது. நேற்று நள்ளிரவில் ராஜாராம் சாக்கு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ வேகமாக பரவி அடுத்தடுத்த கடைகளிலும் தீ பிடித்தது. தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தேனி மற்றும் பெரியகுளம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதும் பல லட்சம் மதிப்பிலான சாக்கு மூடைகள் எரிந்து கருகியது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் தீ வைத்து சென்றனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News