செய்திகள்

விருதுநகரில் வி‌ஷ மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை

Published On 2018-04-14 12:46 GMT   |   Update On 2018-04-14 12:46 GMT
விருதுநகரில் மோட்டார் சைக்கிளை அடகு வைத்த தகராறில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார்.

விருதுநகர்:

விருதுநகர் இ.குமாரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 40). இவருடைய மனைவி ராஜபுஷ்பம் (35).

பரந்தாமன், வேலை எதுவும் செய்யாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிளையும் அடகு வைத்து விட்டாராம்.

இது தெரியவந்ததும் ராஜபுஷ்பம், கணவரை கண்டித்துள்ளார். இதனால் பரந்தாமன் மன வேதனை அடைந்தார். வாழ்க்கையில் வேதனை அடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News