செய்திகள்

கொடைக்கானலில் சாரல் மழை - மன்னவனூர் கிராமத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

Published On 2018-04-12 11:53 GMT   |   Update On 2018-04-12 11:53 GMT
கொடைக்கானலில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் மன்னவனூரில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
பெருமாள்மலை:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், பள்ளி விடுமுறை காரணமாகவும், கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

அவ்வாறு வரும் பயணிகள் சுற்றுலா இடங்களை மழையில் நனைந்தபடி ரசித்து வருகின்றனர். மேலும் பலர் மேல்மலை கிராமமான மன்னவனூர், பூண்டி, கிளாவரை ஆகிய சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

மன்னவனூர், எழும் பள்ளம் ஏரியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகுசவாரி செய்து மகிழ்கின்றனர். இங்கு மழை முற்றிலும் இல்லை. பகலில் வெயிலின் தாக்கம் அடியோடு குறைந்து மேகமூட்டத்துடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. காலையில் வரும் சுற்றுலா பயணிகள் மாலை வரை இங்கு தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News