செய்திகள்
தர்மபுரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: தினகரன் எம்.எல்.ஏ.-நிர்வாகிகள் மீது வழக்கு
தர்மபுரியில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தர்மபுரி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், போலீசாரின் அனுமதியின்றியும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கட்சியின் துணைபொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் பி.பழனியப்பன், மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் ஆர்.ஆர்.முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது தர்மபுரி டவுன் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.