செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக 3 பேர் கைது
சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி:
சிவகாசியைச் சேர்ந்தவர் ஹரிச்சந்திரன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் உள்ளது.
நேற்று காலை தரைச்சக்கரத்திற்கு மருந்து கலவை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல், காக்கிவாடன்பட்டி என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
இந்நிலையில், சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் பலியாகினர், இதனால் சிவகாசி வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வெடி விபத்து தொடர்பாக இதுவரை மேலாளர் செந்தில்வேல் உள்பட 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான ஆலை உரிமையாளர்கள் கணேசன், ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.
சிவகாசியைச் சேர்ந்தவர் ஹரிச்சந்திரன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் உள்ளது.
நேற்று காலை தரைச்சக்கரத்திற்கு மருந்து கலவை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல், காக்கிவாடன்பட்டி என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
இந்நிலையில், சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் பலியாகினர், இதனால் சிவகாசி வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வெடி விபத்து தொடர்பாக இதுவரை மேலாளர் செந்தில்வேல் உள்பட 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான ஆலை உரிமையாளர்கள் கணேசன், ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.