செய்திகள்

போடி அருகே வாலிபரை தாக்கிய கும்பல் கைது

Published On 2018-04-04 10:30 GMT   |   Update On 2018-04-04 10:30 GMT
போடி அருகே வாலிபரை மண்வெட்டியால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

போடி அருகே உள்ள பி.தருமத்துப்பட்டி கருப்பசாமிகோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணபிரபு(வயது24). இவரது மாமா பிரகலாதன். இவருடைய மகள் சண்முகபிரியா. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் பெத்துராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த கிருஷ்ணபிரபு, பிரகலாதன் ஆகியோர் அழகர்சாமியிடம் சென்று மகனை கண்டித்து வைக்குமாறு சத்தம்போட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த அழகர்சாமி மற்றும் அவரது உறவினர்கள் முருகவேல், கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து கிருஷ்ணபிரபுவை மண்வெட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தாக்கிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News