செய்திகள்

விருதுநகரில் பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2018-03-31 11:44 GMT   |   Update On 2018-03-31 11:44 GMT
விருதுநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் 19 பவுன் நகையை மர்ம மனிதர்கள் பறித்துச் சென்றனர்.

விருதுநகர்:

கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்று பவர் மரிய அருள். இவரது மனைவி லூசியா (வயது 36).

இவர் புனிதவெள்ளியை முன்னிட்டு விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று இரவு தேவாலயம் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் லூசியா கழுத்தில் கிடந்த 19 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்து விருதுநகர் பஜார் போலீசில் லூசியா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News