செய்திகள்
முத்துப்பேட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் கடத்தல்
முத்துப்பேட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை பகுதி மருதங்காவெளி தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இறந்துவிட்டார். இவரது மகள் சண்முகசுந்தரி (வயது 19).
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் 15 நாட்களில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் அவர் வீட்டிலிருந்து மாயமாகி விட்டார். முத்துப்பேட்டையில் அகல ரெயில் பாதை பணி நடக்கிறது. இதில் சிதம்பரத்தை சேர்ந்த பாபு என்பவர் வேலை பார்த்து வந்தார்.
பாபு தனது மகளை கடத்தி சென்று விட்டதாக சண்முக சுந்தரியின் தாய் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.