செய்திகள்
அ.தி.மு.க. எம்.பி. மகன் மீது பெண் தொழில் அதிபர் பரபரப்பு புகார்
திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக அ.தி.மு.க. எம்.பி. மகன் மீது பெண் தொழில் அதிபர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை:
சென்னை மடிப்பாக்கம் ராம் நகரை சேர்ந்தவர் பிரபலா என்ற ரோமினா. இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் சென்னை வானொலி நிலையத்தில் தொகுப்பாளராக வேலை செய்கிறேன். சொந்தமாக தொழிலும் செய்து வருகிறேன். சிறந்த தொழில் முனைவோராக தேர்வு செய்யப்பட்டு எனக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி கலந்துகொண்டார். அன்று முதல் அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. எனது கணவர் இறந்துவிட்டார். நான் தனிமையில் இருந்தேன். அவரும், அவரது மனைவியை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறினார். என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார். எனது நகைகளை விற்று அவருக்கு ரூ.50 லட்சம் பணம் கொடுத்தேன். தற்போது அவர் என்னை உதறிவிட்டு வேறோரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். நாளை (ஞாயிற்றுகிழமை) திருமணம் நடைபெற உள்ளது. அந்த திருமணத்தை தடுத்து நிறுத்துவதோடு, நாசர் அலி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
புகார் மனுவுடன் நாசர் அலியோடு அவர் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் ஆதாரங்களாக கொடுத்துள்ளார். தன் மீது உள்ள புகாரை நாசர் அலி ஏற்கனவே மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #tamilnews
சென்னை மடிப்பாக்கம் ராம் நகரை சேர்ந்தவர் பிரபலா என்ற ரோமினா. இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் சென்னை வானொலி நிலையத்தில் தொகுப்பாளராக வேலை செய்கிறேன். சொந்தமாக தொழிலும் செய்து வருகிறேன். சிறந்த தொழில் முனைவோராக தேர்வு செய்யப்பட்டு எனக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி கலந்துகொண்டார். அன்று முதல் அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. எனது கணவர் இறந்துவிட்டார். நான் தனிமையில் இருந்தேன். அவரும், அவரது மனைவியை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறினார். என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார். எனது நகைகளை விற்று அவருக்கு ரூ.50 லட்சம் பணம் கொடுத்தேன். தற்போது அவர் என்னை உதறிவிட்டு வேறோரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். நாளை (ஞாயிற்றுகிழமை) திருமணம் நடைபெற உள்ளது. அந்த திருமணத்தை தடுத்து நிறுத்துவதோடு, நாசர் அலி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
புகார் மனுவுடன் நாசர் அலியோடு அவர் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் ஆதாரங்களாக கொடுத்துள்ளார். தன் மீது உள்ள புகாரை நாசர் அலி ஏற்கனவே மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #tamilnews