செய்திகள்

கம்பத்தில் சிக்கிய காற்றாடியை எடுத்த மாணவன் மின்சாரம் தாக்கி பலி

Published On 2018-03-19 10:03 GMT   |   Update On 2018-03-19 10:03 GMT
குன்றத்தூர் அருகே மின் கம்பத்தில் சிக்கியிருந்த காற்றாடியை எடுக்க முயன்றபோது சிறுவனின் கை தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானான்.
பூந்தமல்லி:

குன்றத்தூரை அடுத்த கோவூர் பாபுகார்டன் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் ஹரீஷ் (14). இவன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 7வது வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஒரு காலி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஏற்கனவே அறுந்து வந்த காற்றாடி ஒன்று அங்கிருந்த மின்கம்பத்தில் சிக்கி கிடந்தது.

அதை எடுக்க முயன்றபோது கம்பத்தில் தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் அவனது கை சிக்கியது. இதனால் அவனை மின்சாரம் தாக்கியது.

தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் இருந்த அவனை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். #tamilnews

Tags:    

Similar News