புதுச்சேரி அருகே விபத்து: பெண் பலி
புதுச்சேரி:
புதுவை பட்டானூர் கலைவாணி நகரை சேர்ந்த பெருமாள் ராஜாவின் மனைவி மாரியம்மாள்.
இவர் சமீபத்தில் அரியலூர் மாவட்டம் சிவராம்புரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்து விட்டது.
இதனால் அங்கு சிகிச்சை பெற்றதற்கு பிறகு மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மகளை கவனித்துக்கொள்வதற்காக மாரியம்மாளின் தாயார் மூக்காயி. பட்டானூர் வந்திருந்தார்.
அவரை மாரியம்மாளின் மாமனார் சுந்தர்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட் டுக்கு அழைத்து வந்தார்.
ஜிப்மரை தாண்டி சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில், மூக்காயி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதுபற்றி வடக்கு பகுதி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வரதராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கார் டிரைவர் கமலக்கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.