செய்திகள்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்- வி.சி.க. வலியுறுத்தல்

Published On 2018-03-07 10:16 GMT   |   Update On 2018-03-07 10:26 GMT
பெரியார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த எச். ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திரிபுரா மாநில சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரவை அமைக்காத நிலையில் பா.ஜனதா கட்சியின் வெறியாட்டம் தொடங்கி விட்டது. உலக மக்களால் மிகவும் நேசிக்கப்படும் ரஷிய புரட்சியின் தலைவர் லெனின் சிலையை உடைத்து சேதப்படுத்தியதோடு கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தையும் சூரையாடி உள்ளனர்.

அதையொட்டி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள எச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலையும் உடைக்கப்படும் என்று பாசிச மத வெறியுடனும் இறுமாப்போடும் கூறியுள்ளனர். திரிபுராவில் தலைவர் லெனின் சிலையை உடைத்ததையும் எச்.ராஜாவின் பேச்சையும் புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

எனவே தொடர்ந்து தமிழகத்தில் தலைவர்களையும், பொதுவுடமை வாதிகளையும் இழிவுபடுத்தி பேசுவதன் மூலம் இங்கு சமூக மோதல்களை உருவாக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகின்ற பா.ஜனதாவின் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு தேவ.பொழிலன் அறிக்கையில் கூறியுள்ளார். #tamilnews

Tags:    

Similar News