செய்திகள்

வில்லியனூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலி

Published On 2018-03-05 17:29 GMT   |   Update On 2018-03-05 17:29 GMT
வில்லியனூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமை தூக்கும் தொழிலாளி இறந்து போனார்.

சேதராப்பட்டு:

வில்லியனூர் அருகே தமிழக பகுதியான பெரம்பை ரோட்டில் இன்று அதிகாலை ஒரு வாலிபர் உடலில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் பிச்சைவீரன்பேட் பகுதியை சேர்ந்த ஞானவேலு மகன் திருஞானம் (வயது36) சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் மதுகுடிக்கும் பழக்கம் உள்ள திருஞானம் இன்று அதிகாலை அருகில் உள்ள சாராய கடைக்கு சென்று சாராயம் குடித்துவிட்டு திரும்பும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் திருஞானத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து திருஞானம் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News