search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுமை தூக்கும் தொழிலாளி பலி"

    கருவடிக்குப்பத்தில் லாரி மோதியதில் சுமை தூக்கும் தொழிலாளி இறந்து போனார்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன், (வயது55). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் புதுவையில் தங்கி சில நாட்கள் வேலைசெய்து விட்டு சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்தினருக்கு கொடுக்க ஊருக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று காலை தனசேகரன் கருவடிக்குப்பத்தில் உள்ள குடோனில் லாரியில் வந்த டைல்ஸ் கற்களை இறக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது லாரியின் டிரைவர் பின்னோக்கி நகர்த்திய போது எதிர்பாராதவிதமாக லாரி மோதியதில் தனசேகரன் தலை நசுங்கியது. உடனடியாக அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் தனசேகரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனசேகரன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகீர், தயாளன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்து போன தனசேகரனுக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×