என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுமை தூக்கும் தொழிலாளி பலி"
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன், (வயது55). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் புதுவையில் தங்கி சில நாட்கள் வேலைசெய்து விட்டு சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்தினருக்கு கொடுக்க ஊருக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை தனசேகரன் கருவடிக்குப்பத்தில் உள்ள குடோனில் லாரியில் வந்த டைல்ஸ் கற்களை இறக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது லாரியின் டிரைவர் பின்னோக்கி நகர்த்திய போது எதிர்பாராதவிதமாக லாரி மோதியதில் தனசேகரன் தலை நசுங்கியது. உடனடியாக அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் தனசேகரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனசேகரன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகீர், தயாளன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்து போன தனசேகரனுக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்