செய்திகள்

வில்லியனூர் அருகே தோழி வீட்டுக்கு சென்ற நர்சு மாயம்

Published On 2018-03-05 11:58 GMT   |   Update On 2018-03-05 11:58 GMT
வில்லியனூர் அருகே தோழி வீட்டுக்கு சென்ற நர்சு மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் நர்சை தேடி வருகிறார்கள்.

வில்லியனூர்:

வில்லியனூர் தட்டாஞ்சாவடி குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் அனந்தராமன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் ஸ்ரீதேவி (வயது21). இவர் நர்சிங் படித்து முடித்து அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று ஸ்ரீதேவி தனது தாய் விஜயலட்சுமியிடம் காராமணிக்குப்பத்தில் உள்ள தோழி ரமணி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிசென்றார். ஆனால் அதன்பிறகு ஸ்ரீதேவி வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் ஸ்ரீதேவி இல்லை.

இதையடுத்து விஜயலட்சுமி தனது மகள் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ஸ்ரீதேவியை தேடிருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News