செய்திகள்

பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

Published On 2018-02-21 08:57 GMT   |   Update On 2018-02-21 08:57 GMT
தண்டையார்பேட்டை அருகே பள்ளிக்கு செல்லததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம்:

தண்டையார்பேட்டை, கருணாநிதி நகரை சேர்ந்தவர் ஜெகன். இவரது மகன் சஞ்சய் (வயது 14). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

சஞ்சய் சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த சஞ்சய் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு (28). இவரது தாய் இதய நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த ராமு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். #tamilnews
Tags:    

Similar News