செய்திகள்

சுரண்டை அருகே பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த தொழிலாளி- போலீசார் விசாரணை

Published On 2018-02-19 14:40 GMT   |   Update On 2018-02-19 14:40 GMT
சுரண்டை அருகே பூட்டிய வீட்டுக்குள் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுரண்டை:

சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள கோகிலாண்டனூரை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது50). கூலி தொழிலாளி. இவர் குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் குடும்பத்துடன் ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் அந்தோணிசாமி நேற்று தனது அறையில் படுத்து தூங்கினார். காலையில் பார்த்தபோது அவர் அறையில் ரத்த வாந்தி எடுத்து இறந்து கிடந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுபற்றி சேர்ந்தமரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அந்தோணிசாமி எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News