செய்திகள்

மதுரை புதூரில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை

Published On 2018-02-17 17:11 GMT   |   Update On 2018-02-17 17:11 GMT
அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்ததை தந்தை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை:

மதுரை கே.புதூர் பாண்டி நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 18). சூர்யா நகர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

சந்தோஷ்குமார் அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை எடுத்துள்ளார். இதனை முருகன் கண்டித்துள்ளார். இதனால் சந்தோஷ்குமார் மன வேதனை அடைந்தார்.

நேற்று காலை 8.30 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News