செய்திகள்
குன்னூரில் அலங்கார வளைவு விழுந்து தொழிலாளி மண்டை உடைந்தது
குன்னூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி மீது அலங்கார வளைவு விழுந்தது. இதில் அவருடைய மண்டை உடைந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் பாரூக்(வயது 67). தொழிலாளி. இவர் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அவர் வால்ஸ்பால்ஸ் என்ற பகுதியில் சென்றபோது அலங்கார வளைவு அவர் தலை மீது விழுந்து மண்டை உடைந்தது. இதையடுத்து அவருக்கு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.