செய்திகள்

திருவாண்டார்கோவிலில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-02-16 14:22 GMT   |   Update On 2018-02-16 14:22 GMT
திருவாண்டார் கோவிலில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருபுவனை:

திருபுவனை அருகே திருவாண்டார் கோவில் சீனுவாசா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சரண்ராஜ். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி யோகலட்சுமி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் மகள் உள்ளாள்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் சரண்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த யோகலட்சுமி திடீரென வீட்டில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார்.

அக்கம் பக்கத்தினர் யோகலட்சுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே யோகலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து யோகலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News