செய்திகள்
ராஜபாளையத்தில் கல்லூரி மாணவி மாயம்
ராஜபாளையத்தில் கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணப் பெருமாள். இவரது மகள் சத்யா தேவி (வயது 19). சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் சத்யா திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்து பெற்றோர் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்தனர். ஆனால் சத்யா தேவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் லட்சுமணப் பெருமாள் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப்பதிவு செய்து மாயமான சத்யா தேவியை தேடி வருகிறார்.