செய்திகள்

பிள்ளைதோட்டத்தில் கடைக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவி மாயம்

Published On 2018-02-12 13:06 GMT   |   Update On 2018-02-12 13:06 GMT
பிள்ளைதோட்டத்தில் கடைக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவி மாயமானார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை பிள்ளை தோட்டம் நவீனா கார்டன் பகுதியை சேர்ந்தவர் அடைக்கலம். இவருடைய அண்ணன் மகள் அனுஷா (வயது21). இவரது வீட்டில் தங்கி டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்தார்.

சம்பவத்தன்று அனுஷா கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அனுஷா வீடு திரும்பவில்லை. தோழிகள்வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் அனுஷா இல்லை.

இதையடுத்து அடைக்கலம் தனது அண்ணன் மகள் அனுஷா மாயமானது குறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து அனுஷாவை யாராவது கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News