செய்திகள்

புதுவையில் மீனவர் தற்கொலை முயற்சி

Published On 2018-02-09 13:57 GMT   |   Update On 2018-02-09 13:57 GMT
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்த மீனவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை குருசுக்குப்பம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மணியரசன் (வயது 36). மீனவர். இவருக்கு சரசு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த மணியரசன் கடந்த சில நாட்களாக சிறுநீரக நோயாலும் அவதி அடைந்து வந்தார்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மணியரசன் நேற்று மாலை செஞ்சி சாலை மைதானத்தில் மதுவில் வி‌ஷத்தை கலந்து குடித்தார். வெகுநேரமாக கணவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சரசு மைதானத்துக்கு வந்து பார்த்தார். அப்போது கணவர் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு மணியரசன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News