செய்திகள்

மதுரை அருகே கஞ்சா பறிமுதல்: வாலிபர்கள் கைது

Published On 2018-01-31 09:26 GMT   |   Update On 2018-01-31 09:49 GMT
மதுரை அருகே கஞ்சா விற்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை அருகே உள்ள எம்.சத்திரப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புதுராஜா மற்றும் போலீசார் காஞ்சரம்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டு முன்பு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கோடாங்கிப்பட்டியைச் சேர்ந்த இளங்கோ மகன் தீபக் (வயது 21), அலங்காநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் மகன் ராஜேஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அந்தப்பகுதியில் போலீசார் சோதனை செய்த போது ஒரு வீட்டில் கஞ்சா விற்பது தெரியவந்தது. அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி மனைவி லட்சுமி (65), சசிகுமார் மனைவி ரேணுகா (30) ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News